ராயர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்துவிட்டார்! – PROF ராமசாமி சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 12,

சுக்மாவில் சிலம்பம் இடம்பெறாததால் இந்தியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதால் மட்டுமே அரசாங்கம் சிலம்பம் போட்டியைச் சுக்மாவில் அங்கீகரித்திருப்பதாகவும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் போல அமைதியாகவே இருந்ததாகவும் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார். 

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டைச் சுக்மாவில் சேர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து இந்தியர்களிடமிருந்து எதிர்ப்பு அலை கிளம்பியதும் அதன் பின்னர் சுக்மாவில் சிலம்பம் சேர்க்கப்பட்டிருப்பதால் இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பங்களிப்பு என்ன இருக்கிறது என பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பினார். இந்தியர்களின் எதிர்ப்பால் சுக்மாவில் சிலம்பம் சேர்த்துக்கொள்ளப்பட்டதும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாக்கத்தால் சிலம்பம் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதாக ராயர் பேசுவதாக பேராசிரியர் ராமசாமி சாடினார்.

பல்லினக் கட்சியாக இருந்த டி.ஏ.பியில் ராயர் தாம் ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்து புகழ்ச்சிக்காகப் பேசுகிறார் என ராமசாமி சாடினார். உண்மையில் இந்திய சமூகத்திற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் சுக்மாவில் சிலம்பம் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். இந்தியர்களின் எதிர்ப்பால் மட்டுமே சிலம்பம் இப்போது சுக்மாவில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது, இவர்களின் கருணையால் சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என உரிமைக் கட்சியின் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ, சிலம்பத்தைச் சேர்க்கச் செலாங்கூர் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பதிலாக, விமர்சகர்கள் மீது இனவாத குற்றச்சாட்டை சுமத்தினார். விசித்திரமாக, சுக்மா தலைவராக இருந்தும், சிலம்ப நீக்கத்தைத் தடுக்கக் கூடிய அதிகாரம் இருந்தும், அவர் பொறுப்பை செலாங்கூர் சுக்மா குழுவின் மீது தள்ளினார். விமர்சகர்களைத் தாக்குவதில் வேகமாக இருந்த அவர், மாநில அமைப்பாளர்களை கண்டிப்பதில் துணிவற்றவராக இருந்துள்ளார்.

ராயரின் கருத்துகள், கூட்டாட்சி அரசு இந்திய சமூகத்திற்கு பயனுள்ள பிரதிநிதித்துவம் அளிக்கிறது என்ற தோற்றத்தைத் தருகின்றன. உண்மையில், பிரதமர் அன்வார் இப்ராஹிமை “மலேசியாவின் காந்தி-மண்டேலா” என்று புகழ்ந்து பேசுவதைத்தவிர, இந்திய மலேசியர்களுக்காக அவர் அரிதாகவே பேசுகிறார். உண்மையில் சிலம்பத்தின் பிரச்சினையை அவர் ஆதரித்திருந்தால், அதை பாராளுமன்றத்தில் எழுப்பியிருப்பார்—ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

டிஏபி தனது பன்முகக் கட்சி முகமூடியை பெரும்பாலும் களைந்துவிட்டாலும், இந்திய பிரச்சினைகளைத் தவிர்ப்பதன் மூலம் ராயர் பன்முகத்தன்மையின் தோற்றத்தைத் கலைத்துவிட்டார். பெரும்பாலும், அவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையே மறந்துவிடுகிறார்! ஏனெனில் பேசினால் தனது கட்சித் தலைவர்களைப் புண்படுத்தும் அபாயம் இருப்பதாக உணருகிறார்.

2026 சுக்மாவில் சிலம்பம் மீண்டும் சேர்க்கப்பட்டது, கூட்டாட்சி அல்லது மாநில அரசின் கருணையால் அல்ல, இந்திய மக்களின் தொடர்ச்சியான, கூர்மையான விமர்சனங்களால் தான். இதற்கிடையில், ஆட்சிக் கூட்டணியில் உள்ள இந்தியத் தலைவர்கள், சமூகப் பிரச்சினைகளுக்கு விட, தங்கள் புகழ்ச்சி வேலையில் அதிக கவனம் செலுத்தியிருந்தனர். அதனால்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆட்சிக் கூட்டணிக்கு இந்தியர்களின் ஆதரவு குறைந்துள்ளது என்பதில் ஆச்சரியமில்லை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *