மகா கூட்டணி! அல்லாஹ்வின் கட்டளைகளால் இயங்கும் அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்! - ஹாடி அவாங்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 19: மலேசியாவில் மலாய் மற்றும் இஸ்லாமியக் கட்சிகளை ஒன்றிணைக்க முன்மொழியப்பட்ட "மகா கூட்டணியில்" சேரலாம் என்று, பாஸ் சூசகமாக தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டணி அல்லாஹ்வின் கட்டளைகளால் வழிநடத்தப்படும் அரசாங்கத்தால் நங்கூரமிடப்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இன சமூகம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் மலாய்-முஸ்லிம் ஒற்றுமை நிலைநிறுத்தப்படும் நபிகள் நாயகத்தின் தலைமை மாதிரியிலிருந்து பாஸ் உத்வேகம் பெற்றதாகக் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

பிரிவினைக்கான மூலக் காரணங்களான அநீதி மற்றும் அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட பாவங்கள் குறித்து அமைதியாக இருக்கும் ஒற்றுமை மாதிரியை பாஸ் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் இன்று பேஸ்புக்கில் பகிரப்பட்ட நீண்ட 'மின்டா பிரசிடன் பாஸ் (அதிபரின் சிந்தனைகள்) பற்றி கூறினார்.

அதனால்தான் பாஸ் தெளிவான எல்லைகளைக் கொண்டிராத மற்றும் பன்மைத்துவம், தாராளமயம், தீவிரவாதம் மற்றும் தார்மீக சமரசம் உட்பட அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒற்றுமை அரசாங்கத்துடன் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையான ஒற்றுமை அதன் சொந்தக் கட்சிகளுக்குள்ளும் கூட பிளவுகளைத் தீர்க்க முடியாது. பெரிய கூட்டணியைப் பற்றி சொல்லப்போனால்,  இது ஒரு மூழ்கும் கப்பல் போன்றது. 'மாபெரும் ஒற்றுமை' என்று முத்திரை குத்தப்படுகிறது. ஆனால் உள்ளிருந்து சரிந்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஹாடியின் கருத்துக்கள் அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் மாபெரும் கூட்டணிக்கானமுன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாகப் பதிவிடப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *