சண்டகானில் தன் தாகம் தணிக்க உணவகம் சென்ற ஒராங்குத்தான்!

top-news
FREE WEBSITE AD

சண்டகானில் உள்ள காடுகளின் மேம்பாட்டு மையத்திற்குள் உள்ளே சென்ற  ஒராங்குத்தான் வகை குரங்கு அங்கு உள்ள குளிர் பானங்களை எடுத்துக் குடிக்க முயற்சித்துள்ள சம்பவம் வேடிக்கையாகவும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

செபிலோக் ஒராங்குத்தான்  மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த அக்குரங்கு, குளிர்சாதனப்பெட்டியில் இருந்து குளிர்பான பாக்கெட்டுகளை எடுத்துப்  பருக முயற்சிப்பது வீடியோவில்  பதிவாகியுள்ளது.

 அதிக வெப்பமான காலநிலை காரணமாக, RDC Sepilok இல் உள்ள 'கெருயிங் கஃபேக்கு' எதிர்பாராத விருந்தினர் ஒருவர் வந்ததாகவும், மேலும் குளிர்சாதனப் பெட்டியில் தனக்கு வேண்டியதை எடுத்துப் பணம் செலுத்தாமல் சென்றதாகவும்,  சபா வனத்துறை துணை காப்பாளர் டாக்டர் ஆர்தர் சுங் தனது முகநூல் பக்கத்தில் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

ஆர்தர் சுங்கின் கூற்றுப்படி, உணவகத்தில் ஓர் ஓராங்குத்தான் வகை குரங்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.  ஆனால்  குளிர்சாதனப்பெட்டிக்கு  சென்ற செயல் இதுவே முதல் முறை. முதல் முறையே உள்ளே வந்து  அங்கிருந்த பானங்களை எடுத்துக் கொண்டது. அது நீண்ட நேரம் நிற்கவில்லை. அதன் தாகத்தைத் தணிக்க குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வேறு சில உணவுகளுடன் சென்று விட்டதாகவும், வெப்பமான வானிலை காரணமாக ஒராங்குத்தான் வந்திருக்கலாம் என்றும்   ஆர்தர் சுங் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *