RM 59 சிம்கார்டை RM 1500-விற்ற மோசடிக் கடைக்காரர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22: இலங்கையைச் சேர்ந்த புத்த பிக்கு ஒருவருக்கு சிம்கார்டு ஒன்றை 1500 வெள்ளிக்கு கடைக்காரர் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த புத்த பிக்குவான அரியாராதான் ரெவன்  என்பவர் புதிய சிம்கார்டு வேண்டி சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் அனுக, கடைக்காரர் 59 வெள்ளி மதிப்புள்ள சிம்கார்டை 1500 வெள்ளிக்கு விற்று மோசடி புரிந்துள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் தமது பணத்தைத் திருப்பித் தருமாறு அந்த புத்த பிக்கு மன்றாடியும், கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனை அறிந்த உலக மலேசிய மனிதநேயக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ த.கமலநாதன்‌ பாதிக்கப்பட்டவரை அழைத்துக்‌ கொண்டு சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம்‌ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

இதுபோன்ற மோசடி நடவடிக்கை குறித்து மக்கள்‌ விழிப்பாக இருக்க வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ செய்ததாக கமலநாதன் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *