அரசாங்கத்தில் உள்ள மலாய் தலைவர்கள் பலவீனமாக உள்ளனரா?

top-news
FREE WEBSITE AD



பெட்டாலிங் ஜெயா, செப் 14: ஹலால் சான்றிதழ் தொடர்பான சர்ச்சையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே ஆகியோரின் உறுதியான பதில்கள், அரசாங்கத்தில் உள்ள மலாய் தலைவர்கள் தங்கள் முஸ்லீம் அல்லாத பங்காளிகளுடன் உறவுகளை எவ்வாறு திறம்பட கையாள முடியும் என்பதைக் காட்டுகிறது என்று அமானா மத்திய குழு உறுப்பினர் சானி ஹம்சான் தெரிவித்துள்ளார்.

DAP துணைத் தலைவர் தெரசா கோக்கைக் கண்டிக்காததற்காக அரசாங்கத்தில் உள்ள மலாய் தலைவர்கள் பலவீனமாக இருப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கூற்றை அவர் நிராகரித்தார்.

பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் வழங்காத உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்கும் முன்மொழிவு குறித்து செபூத்தே எம்.பி தெரேசா கோக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது அறிக்கை தொடர்பாக அன்வார் கோக்கைக் கண்டித்ததாகவும், அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்புமாறு அவரது கட்சிக்கு அழைப்பு விடுத்ததாகவும் சானி கூறினார்.

அது போதுமான பலம் இல்லை என்றால், அம்னோ இளைஞர் தலைவரின் கருத்து, அவருக்கு எதிராக 25 மில்லியன் வழக்குத் தாக்கல் செய்ய வழிவகுத்துள்ளதையும் அவர்கள் கருத்தில் கொள்ளா வேண்டும் என்று அவர் தெரிவித்தார்!



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *