மலேசியாவுக்கு சிறந்த சர்வதேச அங்கீகாரம்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

சைபர்ஜெயா, செப் 9: சீனா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய வல்லரசு நாடுகளின் மூலோபாய ஒத்துழைப்பால் மலேசியா இப்போது சிறந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், ஆசியான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காஉள்ளிட்ட மலேசியாவின் பாரம்பரிய வர்த்தக பங்காளிகளுடன் இருக்கும் உறவுகளை இந்த ஒத்துழைப்பு பாதிக்காது என் று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற பொது-தனியார் ஒத்துழைப்பு மாஸ்டர் பிளான் 2030 (PIKAS 2030) வெளியீட்டு விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மூலம் முதலீடு செய்ய அனுமதித்த மலேசியாவின் ஒத்துழைப்புக்கு அமெரிக்கா, வர்த்தக செயலாளர் ஜினா எம். ரைமண்டோவின் கடிதம் மூலம் இன்று பாராட்டு தெரிவித்ததால், நாட்டின் அங்கீகாரம் தொடர்ந்து வலுப்பெற்றதாக அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *