பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்!

top-news
FREE WEBSITE AD



பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு சபலென்கா, ரைபகினா முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இத்தொடரின் உலகின் 4 ஆம் நிலை வீராங்கனை கஜகஸ்தானின் எலினா ரைபகினா,85வது இடம் வகிக்கும் பெல்ஜியத்தின் கிரீட் மினனை சந்தித்தார். முதல் செட்டை 6-2 என எளிதாக வசப்படுத்திய ரைபகினா, அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றினார். முடிவில் ரைபகினா 6-2, 6-3 என நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் 'நம்பர்-8' வீராங்கனை, சீனாவின் குன்வென் ஜெங், பிரான்சின் அலைஸ் கார்னெட்டை எதிர்கொண்டார். இதில் ஜெங் 6-2, 6-1 என எளிதாக வெற்றி பெற்றார்.

உலகின் நம்பர்-2 வீராங்கனை பெலாரசின் சபலென்கா, ரஷ்யாவின் ஆன்ட்ரீவாவை சந்தித்தார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், ஜெர்மனியின் கோயபெரை சந்தித்தார். முதல் இரு செட்டை 6-3, 6-4 என கைப்பற்றினார் மெத்வெடேவ். அடுத்த செட்டை 5-7 என இழந்த போதும், நான்காவது செட்டை 6-3 என வசப்படுத்தினார். மூன்று மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் மெத்வெடேவ் 6-3, 6-4, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இத்தாலியின் பாக்னினி, 6-1, 6-1, 7-5 என நெதர்லாந்தின் ஜன்ட்ஸ்கல்ப்பை வென்றார். பிரான்சின் மான்பில்ஸ் 6-2, 3-6, 6-3, 6-4 என பிரேசிலின் சேபோத்தை வீழ்த்தினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் நார்வேயின் காஸ்பர் ரூடு, அர்ஜென்டினாவின் எட்செவ்வரி வெற்றி பெற்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *