இந்தியா - கனடா இடையேயான உறவுகள் தொடர்ந்து கேள்விக்குறி?

top-news
FREE WEBSITE AD

கனடாவில் குடியேறி, அங்கிருந்து இந்திய அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து தனி நாடு கேட்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மிரட்டல் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய அரசும் தனது குடிமக்களை காக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கனடா நாட்டில் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வரும் நிலையில், அக்கொலைகளுக்கும் - இந்திய அரசுக்கும் தொடர்ப்பு இருப்பதாக கனடா பகிரங்க குற்றசாட்டு முன்வைத்து வருகிறது. அந்நாட்டில் குடியேறி அரசியல் அதிகாரத்தை பெற்று வரும் சீக்கியர்கள், தொடர்ந்து தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் முன்வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் சாதகமாகவும்-பாதமாகவும் பேசாமல் அமைதிகாத்து வருகிறது.இதனிடையே, கனடா நாட்டின் மக்களவையில் இந்தியாவுக்கு எதிரான குற்றங்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்கும் இந்திய அரசின் தலையீடு என்பது அதிகரித்து இருக்கிறது. சீனாவுக்கு பின் கனடா நாட்டுக்கு அச்சுறுத்தலை தரும் நாடாக இந்தியா இருக்கிறது என கனடாவின் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா - கனடா இடையேயான உறவுகள் தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது கனடா நாடாளுமன்ற நிலைகுழுவின் வாதம் இரண்டு நாட்டுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான உறவுகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]