பெர்சாத்து கிளையிலிருந்து ஹம்சாவுக்கு அழுத்தம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 6: திரெங்கானு பெர்சாத்து கிளை, துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடினை, கட்சியின் உள் மோதல்களை நிறுத்த அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 

தற்போது ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் உறுப்பினர்களுடனான தனது உறவு குறித்து ஹம்சா தெளிவுபடுத்த வேண்டும் என்றும், கடந்த சனிக்கிழமை நடந்த சபா மாநிலத் தேர்தலில் கட்சியின் மோசமான செயல்திறன் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோலதிரெங்கானு பெர்சாத்து கிளை
வலியுறுத்தியது.

33 வேட்பாளர்களை நிறுத்திய போதிலும் பெர்சத்து ஒரு இடத்தைக் கூட வெல்லாததற்கு ஹம்சா பொறுப்பேற்க வேண்டும்என்று அது கேட்டுகொண்டது,

கட்சியின் கவனம் மக்களிடம் திரும்ப வேண்டும், உள் அரசியல் நாடகத்தில் அல்ல. பெர்சாத்துவுக்கான ஆதரவை பலவீனப்படுத்த எதிரிகள் தற்போது இந்தப் பிரிவினையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்என்று தெரிவித்துளாது.

எந்தவொரு கட்சியும் அதன் தலைமை ஒன்றையொன்று எதிர்த்துப் போராடி சந்தேகித்தால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. பெர்சத்து மீண்டும் வலுவாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், ஒரே தலைவரின் கீழ் ஒன்றுபட்டதாகவும் இருப்பதை நாங்கள் காண விரும்புகிறோம் என்று அது கூறியது.

இந்த ஆண்டு வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு இணங்கவும், கட்சியின் தலைமையின் பின்னால் ஒன்றுபடவும், பெர்சத்துவை பிளவுபடுத்தக்கூடிய இயக்கங்களை நிறுத்தவும், ஒழுங்குமுறை வாரியத்தின் முடிவுகளை மதிக்கவும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களையும் கிளைத் தலைவர்களையும் கோலா தெரெங்கானு கிளை வலியுறுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *