பாதிரியாரின் பாலியல் லீலை! சிறுவனிடம் அத்துமீறல்!

top-news
FREE WEBSITE AD

சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 14: பதின்ம வயது சிறுவனை  பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் பாதிரியார் ஒருவரை நான்கு நாள் காவலில் வைக்க போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 3 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மமாட் தெரிவித்தார்.

விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை பாதிக்கப்பட்ட வேறு யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றும்,  மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேகநபர் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 10.09 மணிக்கு 13 வயது சிறுவனிடம் இருந்து காவல்துறைக்கு புகார் வந்ததாக அவர் தெரிவித்தார்.

பண்டார் புக்கிட் பூச்சோங்கில் உள்ள ஒரு தேவாலயத்தின் மைதானத்தில் உள்ள படுக்கையறையில்  பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் கூறியதாக அவர் குறிப்பிட்டார்

இதனை அடுத்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி பூச்சோங்கில் உள்ள ஓர் உணவகத்தில் 27 வயதுடைய சம்பந்தப்பட்ட  நபரை போலீசார் கைது செய்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *