டத்தோ கரம் சிங் வாலியாவுக்கு பிரதமர் உதவி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்ஆகஸ்ட் 8: கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் டத்தோ கரம் சிங் வாலியாவுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார்.

பிரதமரின் அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் ஃபௌசியால் இந்த நன்கொடையை வழங்கப்பட்டதாக அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

நோயால் பாதிக்கப்பட்டுள்ள 65 வயதான கரமின் உடல்நிலை குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகப் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

சகோதரர் கரம் சிங் விரைவில் குணமடையவும்சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தைப் பற்றி இளைஞர்களுக்குக் கற்பிக்கவும் தாம் பிரார்த்திப்பதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *