சபாவில் பிரதமர்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினாபாலு, செப் 11: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இரண்டு நாள் பயணமாக சபாவிற்கு இன்று தொடங்கி கோத்த கினாபாலு மற்றும் லஹாட் டத்துவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மகெல்லன் சுதேரா துறைமுகத்தில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் மற்றும் முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் ஆகியோர் கலந்துகொள்ளும் சபா மாநில அரசு விருந்தில் கலந்துகொள்வதற்கு முன், பிரதமர் இன்று இரவு கோத்த கினாபாலுவுக்கு வரவுள்ளார்.

நாளை (செப்டம்பர் 12), அன்வார் ஹாஜிஜியுடன் இணைந்து ‘Karnival Segalanya Felda’வில் கலந்துகொள்வதற்காக காலையில் லாஹாட் டத்துவில் உள்ள Felda Sahabat த்துக்குச் செல்கிறார்.

இந்நிகழ்ச்சியில், அன்வாருக்கு சபா கலாச்சார நிகழ்ச்சி மற்றும் ஃபெல்டா குடியேறிகள் பற்றிய ‘‘Mimpi Seorang Ayah’ என்ற வீடியோ திரையிடலுடன் வரவேற்பு அளிக்கப்படும்.

பிற்பகலில், கோத்த கினாபாலுவில் உள்ள சபா சர்வதேச மாநாட்டு மையத்தில், மலேசியா ஒப்பந்தம் 1963 அமலாக்க நடவடிக்கை  கவுன்சில் (MTPMA63) கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *