IJN-ல் பகாங் மந்திரி பெசாரை நலம் விசாரித்தார் பிரதமர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 11: தேசிய இருதயp பயிற்சிக் கழகமான ஐஜேஎன்னில் சிகிச்சை பெற்று வரும் பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று சந்தித்தார்.

வான் ரோஸ்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது. இப்போது ஐஜேஎன் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில்  அவர் இருக்கிறார் என்று அன்வார் பதிவிட்டுள்ளார்.

நல்ல ஆரோக்கியம் மற்றும் விரைவில் குணமடைய  தாம் இறைவனைப் பிராத்திப்பதாக  அவர் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *