ஜப்பானில் பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று நாள்  பயணமாக ஜப்பான் சென்று சேர்ந்தார்.


வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோர் அன்வாரின் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


ஜப்பானில்  நடைபெறும் “ஆசியாவின் எதிர்காலம்” எனும் தலைப்பில்  29வது சர்வதேச மாநாட்டில்   கலந்து கொள்ள அன்வார்  இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக  ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்திக்கவிருக்கும் அன்வார்,  தொழில்துறை தலைவர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *