மாமன்னருக்கு பிரதமரின் பிறந்தநாள் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD



மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.

மாமன்னர்  பல்லாண்டு வாழ,  ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து தாம்  இறைவனைப்  பிரார்த்திப்பதாக பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின்  பாதுகாப்பில் உறுதிமிக்கவராகவும், இஸ்லாம் மார்க்கத்தின் பாதுகாவலராகவும் விளங்கும் மாமன்னர்,, ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்கான அடையாளமாகத் திகழ வேண்டும் என்று அன்வார் பதிவிட்டுள்ளார்.

நம் மக்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, மாமன்னருக்கான விசுவாசத்தைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று  தாம் நம்புவதாக, பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *