2 தவணைதான் பிரதமர் பதவி! சட்ட மசோதா விரைவில் - அன்வார்
- Shan Siva
- 05 Jan, 2026
புத்ராஜெயா, ஜன 5: பிரதமர் அன்வார் இப்ராஹிம் பிரதமரின்
பதவிக்காலத்தை வரம்பிடுவதற்கான மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்
அரசாங்கம் தாக்கல் செய்யும் என்று இன்று அறிவித்தார்.
நிதியமைச்சராகவும்
இருக்கும் அன்வார், பிரதமரின் பதவிக்காலம் 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முறைக்கு மேல் இல்லை என்பதை இந்த மசோதா உறுதி
செய்யும் என்று கூறினார்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முறைக்குக்
கட்டுப்படுத்த கூட்டரசு அரசியலமைப்பைத் திருத்துவதற்கான டிஏபியின் அழைப்புக்கு
அன்வார் ஆதரவளித்தார்.
இருப்பினும், அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெறுவது முக்கியம் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



