பிரதமரின் இந்தியா பயணம் ஒரு நல்ல தொடக்கம்! - மலேசிய இந்திய தொழில்துறையினர் சம்மேளனம் பெருமிதம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப்டம்பர் 3 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம், இரு நாடுகளுக்கும்
இடையிலான பொருளாதாரம் மற்றும் நட்புறவை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி  வரையிலான அந்த மூன்று நாள் பயணம் இரு தரப்பு உறவை விரிவான விவேகப் பங்காளித்துவ நிலைக்கு உயர்த்துவதில் வெற்றி கண்டுள்ளதாகவும், இது  குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகவும், மலேசியாவில் உள்ள இந்திய தொழில்துறைகளின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ உமாங் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், மலேசியாவில் 100 கோடி அமெரிக்க டாலர் செலவில் செயற்கை நுண்ணறிவு பூங்கா மற்றும் திரைப்பட ஸ்டூடியோவை அமைக்க இந்தியாவின் ஈரோஸ் குழுமம் உறுதியளித்துள்ளதும் ஒரு நல்ல தொடக்கம் என்று அவர் வர்ணித்துள்ளார். இந்த புதிய ஸ்டூடியோவில் பாலிவூட் திரைப்படங்கள் உருவாக்கப்படும் என தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *