தன் புற்றுநோய் பொருட்படுத்தாது இளவரசி கேட் வெளியிட்ட ஆனந்த புகைப்படம்!

top-news
FREE WEBSITE AD

ராஜ குடும்பத்தினருக்கென சில மரபுகள் உண்டு. அவ்வகையில், உடை கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு உண்டு. அதுவும் ராஜ குடும்பம் சார்பில் வெளியிடப்படும் புகைப்படங்களில் அவர்கள் மரபுப்படி உடை உடுத்தியுள்ளார்களா என்பதில் அதிக கவனம் செலுத்தப்படும். 

ஆனால்  அதையெல்லாம் மறந்துவிட்டு தான் புற்றுநோயால் அவதியுறும் நேரத்தில், இளவரசி கேட் எடுத்த ஒரு அபூர்வ புகைப்படம் ரசிகர்களை  மகிழ்ச்சியின் உச்சத்தில் வைத்துள்ளது. 

அந்த புகைப்படம் இளவரசி கேட் தன் குடும்பத்தினரை எடுத்த புகைப்படம். தன் கணவரும் பிள்ளைகளும் கடற்கரை ஒன்றில் நிற்கும்போது அவர்களை பின்னாலிருந்து எடுத்த அந்த புகைப்படத்தை தந்தையர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளனர் வில்லியம் கேட் தம்பதியர். 

வில்லியம் ஒரு கையால் தன் மகள் சார்லட்டை அணைத்துக்கொண்டிருக்க, அவளோ, தான் இளவரசி என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் வளைந்து தன் ஒரு கையால் அப்பாவின் இடுப்பைப் பிடித்துக்கொண்டிருக்கிறாள். 

மகளும் மகன்களும் தனக்கு ஒரே மாதிரிதான் என்பதுபோல, மறுகையால் வில்லியம் ஜார்ஜை அணைத்துக்கொண்டிருக்க, ஜார்ஜ் தன் தம்பி லூயிஸை பாதுகாப்பாக பிடித்துக்கொண்டிருக்கிறார். என்றாலும், சார்லட்டைப் போலில்லாமல், நாங்கள் ஆண் பிள்ளைகள், வளைந்து நெளிந்தெல்லாம் அப்பாவைக் கட்டிக்கொள்ளமாட்டோம் என்பது போல, நிமிர்ந்து நிற்கிறார்கள் ஜார்ஜும் லூயிஸும். 

மக்கள் இந்தப் படத்தை அப்படித்தான் வர்ணிக்கிறார்கள். அதுவும், அந்தப் புகைப்படம் இளவரசி கேட் எடுத்த புகைப்படம் என்பதால், இப்படி ஒரு இனிமையான புகைப்படத்தைப் பகிர்ந்ததற்கு இளவரசி கேட்டுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *