உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை! வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நீண்ட கால நஷ்டம்! - ஜாஹிட் ஹமிடி வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6: கட்டுமானத்துறையில் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது திறமையான உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சராகவும் இருக்கும் அவர், கட்டுமானத் துறை வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியே இருக்கும் பட்சத்தில் அரசுக்கு நீண்டகால நஷ்டம் ஏற்படும் என்றார்.

வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினால் செலவு குறைவாக இருக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு, நாடு சுமக்கும் செலவு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி செலவு ஆகியவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *