இந்தியர்களுக்கு முன்னுரிமை! - அமிருடின் ஷாரி

top-news
FREE WEBSITE AD

இந்திய சமூகம் உட்பட பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக சிலாங்கூர் மாநில அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாக சிலாங்கூர் மந்த்கிரி பெசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்திய சமூகத் தலைவர்கள் உடனான சந்திப்பில்  அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களில் சிறு தொழிலை ஊக்குவிக்கும் திட்டமும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், தமிழ்ப் பள்ளிகளுக்கான பள்ளி பேருந்து கட்டண மானியத் திட்டத்திற்கு மொத்தம் RM1.1 மில்லியனை மாநில நிர்வாகம் செலவழிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களை வெற்றி பெற ஊக்குவிக்கும் வகையில், சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம் (PTRS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இது அனைத்து மாணவர்களுக்குமானது என்று அவர் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், மாணவர்களின் வசதியை உறுதி செய்வதற்காக தமிழ்ப் பள்ளிகளுக்கும் வருடாந்திர உதவி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

kbuybo