போதைப்பொருள் கடத்தல்! தாய்லாந்தில் மலேசியர் மூவர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் 97 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெத்தமைன் போதைப்பொருளுடன் 20 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு மையச் செயலகம் மூலம் தாய்லாந்து காவல்துறை இந்தக் கைதுகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.

சரவாக்கைச் சேர்ந்த சந்தேக நபர்கள் அனைவரும், லாவோஸிலிருந்து தாய்லாந்திற்கு இரயில் மூலம் போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக ஒரு சர்வதேச கும்பலால் பணியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக அவர்களுக்கு 60,000 தாய் பாட் (RM7,424) வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. மலேசியாவில் செயல்படும் கும்பல்களுடன் இவர்களுக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்தும் விசாரித்து வருவதாக  ஹுசைன் கூறினார்!

சந்தேக நபர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று ஹுசைன் கூறினார், மேலும் சந்தேகத்திற்குரிய வேலை வாய்ப்புகளை ஏற்க வேண்டாம் என மலேசியர்களை அவர் எச்சரித்தார்.
பாங்காக்கிற்குச் சென்றுகொண்டிருந்த ஒரு ரயிலில், உரிமை கோரப்படாத, போதைப்பொருட்கள் அடங்கிய மூன்று சூட்கேஸ்களை அதிகாரிகள் கண்டெடுத்ததை அடுத்து, அந்த மூவரும் தடுத்து வைக்கப்பட்டதாக தாய்லாந்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிஐபி) கூறியதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *