155% வரி என்ற டிரம்ப் அதிரடி எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து இடாவிட்டால், சீன பொருட்களுக்கு 155% வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.தற்போது சீனா 55% வரி செலுத்துகிறது என்றும், நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த வரி அதிகரிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்ஸுடன் கனிமங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டபோது பேசிய டிரம்ப், இது விநியோக சங்கிலிகளை வலுப்படுத்தவும், சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சி என்றார். அமெரிக்காவை ஒரு "ஒருவழிப் பாதையாக" மற்ற நாடுகள் பயன்படுத்திய காலம் முடிந்துவிட்டது என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய வர்த்தக பதற்றங்களால், சீனா செப்டம்பரில் அமெரிக்க சோயா பீன்ஸை இறக்குமதி செய்யவில்லை என்ற செய்திக்கு மத்தியில் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். விரைவில் தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதாகவும், இரு நாடுகளுக்கும் சாதகமான ஒரு சிறந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *