டிரம்பின் இந்தியா பயணம் ரத்து - இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசலா?

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பரில் நடைபெறவிருந்த குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வர இருந்ததைக் ரத்து செய்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவுக்குப் பின்னால், இந்தியா-அமெரிக்கா இடையே உருவாகியுள்ள வர்த்தகத் தெளிவின்மை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததைக் குற்றம் சுமத்தி, டிரம்ப் நிர்வாகம் இந்திய தயாரிப்புகளுக்கு 50% வரி விதிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-அமெரிக்கா உறவில் அண்மைக்காலமாக பசுமை குறைந்துவரும் அறிகுறிகள் பலமுறை வெளிப்பட்டுள்ளன. டிரம்ப், கடந்த சில வாரங்களாகவே, "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் நிறுத்தினேன்,"என வெளிப்படையாக கூறி வந்தார். ஆனால், இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது, இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாட்டை வலுப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குச் சென்றுள்ளார். இது அமெரிக்க நிர்வாகத்தின் பார்வையில் புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கி இருக்கலாம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

வர்த்தக ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்புகள், குவாட் கூட்டமைப்பு போன்ற துறைகளில் இரு நாடுகளும் கடந்த சில ஆண்டுகளில் நெருக்கமாக செயல்பட்டு வந்த நிலையில், இந்தப் புதிய நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தை திடீரென ரத்து செய்தது, இந்தியா-அமெரிக்கா உறவில் தற்காலிக தளர்வைக் குறிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியா-அமெரிக்கா உறவு, உலக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று. வர்த்தகப் பிரச்சனைகள், ஜியோபாலிடிக்கல் நிலைமைகள் போன்றவை இந்த உறவின் தாக்கத்தை நிர்ணயிக்கின்றன. இந்த சூழ்நிலையில், டிரம்பின் இந்திய பயணம் ரத்தாகலாம் என நம்பத்தகுந்த செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *