மது போதையில் தாறுமாறாக வாகனம் ஓட்டி போக்குவரத்து காவலருக்குக் காயம் ஏற்படுத்தியவர் கைது!

top-news
FREE WEBSITE AD


ஜொகூர் பாரு, ஜூலை 15: நேற்று ஜொகூர் பாரு, பெர்மாஸ் ஜெயாவுக்குச் செல்லும் சாலை, கிலோமீட்டர் 3.6 ஜாலான் பந்தாயில், பணியில் இருந்த போக்குவரத்து காவலருக்குக் காயம் ஏற்படுத்திய குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு, இன்று முதல் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 44(1A)(B) இன் கீழ் விசாரணையை எளிதாக்குவதற்காக மாஜிஸ்திரேட் நூர் ஃபத்தீன் முகமட் ஃபரிட் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நேற்று காலை 7.05 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், அந்த போலீஸ்காரர் இடுப்பு எலும்பு முறிவு மற்றும் முகம் மற்றும் வலது கையில் காயத்திற்கு உள்ளானதாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *