சம்பள உயர்வு தேர்தலுக்கான பிரச்சாரம் அல்ல!

top-news

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கோலகுபு பாரு இடைத்தேர்தலுக்கான  பிரசாரம் அல்ல  என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கோலா குபு பஹாருவில் நடைபெற்ற ஹரி ராயா ஐதில்பித்ரி கொண்டாட்ட விழாவில் சைபுதீன் இதனைத் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கான சம்பள  விவகாரம் ஒற்றுமை அரசாங்கத்தால் நீண்ட காலமாக ஆய்வு செய்யப்பட்டு, கடந்த மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்துடன்  உடன் அறிவிக்க திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு இடைத்தேர்தலில்  எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று  பெர்சாத்து தலைவர் வான் அஹ்மட் ஃபைசல் வான் அகமட் கமால் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்விதமாக சைபுடின்  இதனைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *