ஜாரா கைரினா படித்த பள்ளி முதல்வருடன் தன்னைத் தொடர்புப்படுத்துவதா?! - கல்வி அமைச்சர் புகார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 10: மறைந்த ஜாரா கைரினா மகாதிர் படித்த SMK அகாமா துன் டத்தோ முஸ்தபா பள்ளியின் முதல்வருடன் தன்னை தொடர்புபடுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் காவல்துறை மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் பதிவில், இதுபோன்ற ஊகங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஃபத்லினா அனைவரையும் வலியுறுத்தினார், மேலும் ஜாராவின் குடும்பத்திற்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

சட்ட நடவடிக்கையும் தொடரப்படும் என்றும்,இது அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

அமைச்சரும் பள்ளியின் முதல்வரும் உறவினர்கள், அவர்களின் தாய்மார்கள் சகோதரிகள் என்று கூறிய ஒரு இணையவாசியின் கருத்துகளின் ஸ்கிரீன் ஷாட்டை ஃபத்லினா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

13 வயதான ஜாரா, ஜூலை 16 அன்று அதிகாலை 4 மணிக்கு சபாவின் பாப்பரில் உள்ள பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் பின்னர் மயக்கமடைந்து காணப்பட்டார். மறுநாள் மருத்துவமனையில் அவர் இறந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *