AFCON சாம்பியன் பட்டத்தை வென்றது செனகல்

top-news

ரபாட், ஜன. 19-

செனகல் அணியினர், ஆப்ரிக்க நாடுகள் கோப்பை (AFCON) இறுதிப் போட்டியில் மொராக்கோவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இப்போட்டியில், செனகல் வீரர்கள் மொராக்கோவுக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெனால்டியை எதிர்த்து தற்காலிகமாக மைதானத்தை விட்டு வெளியேறினர்; பின்னர் மீண்டும் திரும்பி ஆட்டத்தைத் தொடர்ந்து வெற்றியைப் பெற்றனர்.

செனகலின் வெற்றிக் கோலை, மத்திய திடல் ஆட்டக்காரர் பாப்பே க்யூயே  94வது நிமிடத்தில் அடித்தார். மொராக்கோவின் முன்னணி வீரர் பரஹிம் டியாஸ்,  வழங்கப்பட்ட பெனால்டியை தவறவிட்டதால் செனகல் அணிக்கு வாய்ப்பு உருவானது. இந்த நேரத்தில் சர்ச்சையின் காரணமாக விளையாட்டு 14 நிமிடங்கள் தாமதமானது.

செனகல் அணியின் பயிற்சியாளர் பாப்பே பூனா தியாக், வீரர்களை மைதானத்தை விட்டு வெளியே செல்லச் செய்தார்; ஆனால் அணியின் முக்கிய நபர் சாடியோ மானே, சக அணியினரை மீண்டும் திரும்பி விளையாடச் செய்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *