இஸ்மாயில் எனக்காகக் காத்திருக்கவில்லை! - மகாதீர்

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 6: தனது விசுவாசமான உதவியாளரும் நெருங்கிய நண்பருமான இஸ்மாயில் மனாஃப் நேற்று காலமானதற்கு துன் டாக்டர் மகாதீர் முகமட் வருத்தம் தெரிவித்துள்ளார்.

70களில் தாம் துணைப் பிரதமராக இருந்தபோது  தம்முடன் இருந்த நெருங்கிய நண்பரையும் உதவியாளரையும் இழந்ததற்காக இன்று தாம் வருந்துவதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.

இஸ்மாயில் எனக்காக காத்திருக்கவில்லை. அவருடைய இழப்பையும் இல்லாததையும் என்னால் உணர முடிந்தது என்று  மகாதீர் தமது முகநூல் பதிவில் கூறினார்.

அவர் ஓர் அசாதாரண நபர் என்று குறிப்பிட்ட மகாதீர், அவர் சம்பளத்திற்காக தனது கடமைகளைச் செய்யவில்லை, ஆனால் அவர் செய்தது சரி என்று நம்பியதாக மகாதீர் தெரிவித்தார்.

 நேற்று (ஜூன் 4) அவரைச் சந்தித்தேன், நான் அவரை வாழ்த்தியபோது அவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனால் இதுவே எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என மகாதீர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]