பின் வாசல் அரசாங்கமா? - பெரிக்காத்தானை கடுமையாகச் சாடிய அக்மால் சலே

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 28: பாரிசான் நேஷனல், பெரிகாத்தான் நேஷனலுடன் இணைந்து நெகிரி செம்பிலானில் ஒரு "பின்வாசல்" அரசாங்கத்தை அமைப்பதற்கு அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு முகநூல் பதிவில், பிப்ரவரி 2020-ல் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு, அரசாங்கங்களைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகள் மீதான தனது நிலைப்பாடு மாறாமல் இருந்து வருவதாக அக்மல் கூறினார்.

அதே நேரத்தில், சிவப்பு கோடுகள் மீறப்படும்போது அம்னோ சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனலின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு புதிய மாநில அரசாங்கத்தை அமைக்கத் தேவையான எளிய பெரும்பான்மை தங்களிடம் இருப்பதாக நெகிரி செம்பிலான் பெரிக்காத்தான் நேஷனல் கூறியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *