1 தமிழ் மாணவருக்கு RM1,000 கல்வி நிதி! - Nga Kor Ming

top-news
FREE WEBSITE AD

Teluk Intan இல் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 240 மாணவர்களுக்குத் தலா 1,000 ரிங்கிட் நிதியை வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் Nga Kor Ming வழங்கினார்.

இத்திட்டத்திற்கு 240,000.00 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று காலை Teluk Intan Sri Vellai Vinayagar மண்டபத்தில் 240 மாணவர்களையும் அழைத்து அவர்களின் ஒவ்வொருவருக்கும் தமது கைப்பட வழங்கியது பெருமையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தலா 1,000 ரிங்கிட் வழங்க தாம் வழிவகுப்பதாக அவர் உறுதியளித்தார். மேலும் பிரதமர் அன்வார் கூறுவது போல Anak Melayu Cina India, anak saya என்பதை அவர் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் என அவர் நம்பிக்கை அளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *