இஸ்மாயில் சப்ரி நியாயமானவர்! - PKR MP புகழாரம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 4: : இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பாக பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று பாசிர் கூடாங் எம்.பி ஹசான் கரீம் கருத்து தெரிவித்துள்ளார்,

பிகேஆர் எம்பியான ஹசான் கரீம்,  இன்று ஒன்பதாவது பிரதமரைப்  புகழ்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  இஸ்மாயில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் பழகுவதில் நியாயமானவர் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து நமது நாட்டில் இணையத்திலும் முக்கிய ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) பற்றிய பேச்சு வந்துள்ளது.

ஆனால் இஸ்மாயிலின் தலைமையின் போது இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்பொழுதும் நீதி தேடும் பயிற்சி பெற்ற வழக்கறிஞராக அவரது குணம் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் பிரதிபலித்தது. அரசாங்க அல்லது எதிர்க்கட்சி என்பதை பொருட்படுத்தாமல் ஒதுக்கீடுகள் அமைந்தது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இஸ்மாயில் பிரதமராக இருந்த காலத்தில் நீதித்துறை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட அனுமதித்ததற்காகவும் ஹசான் இஸ்மாயிலைப் பாராட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *