இஸ்மாயில் சப்ரியிடம் 7மணிநேரம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப். 25-

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியிடம் மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று ஏழு மணிநேரம் விசாரணை நடத்தியது. அந்த ஆணையத்தின் தலைமையகத்தில் எட்டாவது நாளாக அவரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

காலையில் எம்ஏசிசி தலைமையகம் வந்தடைந்த பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில், ஏழு மணி நேரத்திற்குப் பிறகு மாலை 6.10மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். அவருடன் இன்று 3மணியளவில் மீண்டும் விசாரணை நடத்தப்படும்.

தமது முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர் மீது நடத்தப்பட்டுவரும் விசாரணையின் ஒரு பகுதியாக இஸ்மாயிலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அந்த அதிகாரிகளின் வீடுகளிலிருந்தும் இதர மூன்று வளாகங்களிலிருந்தும் பதினேழு கோடி ரொக்கப் பணமும் பதினாறு கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் இஸ்மாயில் முக்கிய சந்தேகப் பேர்வழியாக விளங்குகிறார் என்று எம்ஏசிசி ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Bekas Perdana Menteri, Ismail Sabri disoal siasat selama tujuh jam oleh SPRM berkaitan siasatan ke atas empat bekas pegawai kanan beliau. Isu melibatkan rampasan RM170 juta dan 16kg jongkong emas. Beliau dijangka disoal semula hari ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *