கழிப்பறையில் மாணவி பகடிவதை! கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

கழிப்பறையில் பெண் மாணவியைப் பகடிவதை செய்யும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கல்வி அமைச்சர் FADHLINA sidek தெரிவித்தார், KERIAN இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவி தனது காதலனுடன் நெருக்கமாக இருந்ததால் 15 வயது மாணவியும் அவரின் நண்பர்களும் கழிப்பறையில் வைத்து அம்மாணவியை அறைந்ததாக வாக்குமுலம் வழங்கியுள்ளதாகப் பேராக் மாநிலக் காவல் ஆணையர் Dato'Sri MOHD YUSRI BIN HAJI HASSAN BASRI தெரிவித்தார். 

இது குறித்து பேராக் மாநிலக் கல்வி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடைநிலைப்பள்ளியின் நிர்வாகத்தினரையும் விசாரித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் FADHLINA sidek தெரிவித்தார். 

கடந்த 14 ஜூன் SMJK C KRIAN இடைநிலைப்பள்ளியில் காலை 10.30 மணியளவில் நடந்ததாகவும், பாதிக்கப்பட்ட 13 வயது பெண்ணின் குடும்பத்தார் சம்மந்தப்பட்ட காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதும் நேற்று KERIAN மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் 
பேராக் மாநிலக் காவல் ஆணையர் Dato'Sri MOHD YUSRI BIN HAJI HASSAN BASRI தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *