DAP கட்சி MCA 2.0-வா? DAP தப்பிக்க இதுதான் வழி! - அரசியல் ஆய்வாளர் ஆலோசனை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 27: MCA ஆட்சியில் செய்த தவறுகளை தவிர்க்க, அரசாங்கத்தில் இருக்கும் DAP உறுப்பினர்கள் தங்கள் சரிபார்ப்பு மற்றும் சமநிலை பணிகளைச் சுறுசுறுப்பாக மேற்கொள்ள வேண்டும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிவமுருகன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குப் பணிந்து நடப்பது போன்ற கண்ணோட்டத்தில் இருந்து தப்பிக்க கட்சி வலுவான கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது DAP, MCA போல விமர்சனங்களுக்கு உள்ளாகாமல் இருக்க உதவும் என அவர் FMT-க்கு தெரிவித்துள்ளார்..

டிஏபி கடந்த காலத்தில் எம்சிஏவை அம்னோவின் "லாப்டாக்" என்று முத்திரை குத்தியது.

இன அடிப்படையிலான நிகழ்ச்சி நிரல்களை விட கல்வி, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற தேசிய அக்கறைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் கட்சியின் பல்லின நற்பெயரை வலுப்படுத்துமாறு டிஏபியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிவமுருகன் வலியுறுத்தினார்.

இது DAP ஒரு சீனக் கட்சி என்ற  ஒற்றை இன அடிப்படையிலான கட்சியாகக் கருதப்படுவதிலிருந்து தவிர்க்க அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.

டிஏபி "எம்சிஏ 2.0" வாக மாறிவிட்டதாக  எம்சிஏ முன்னாள் உதவித் தலைவர் தி லியான் கெர் கூறியது குறித்து சிவமுருகன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

 கட்சி செயல்பட அல்லது முன்னேற எம்சிஏவின் ஆதரவு தேவையில்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக தியின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *