சுங்கைப் பக்காப் தேர்தலுக்கு சிறப்பு பணிக்குழுவா? எதிர்க்கட்சிகளின் சுதந்திரத்தை அது கட்டுப்படுத்தும்! - பெர்சாத்து துணைத் தலைவர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 7: வரவிருக்கும் சுங்கை பக்காப் இடைத்தேர்தலுக்காக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைத் தடுக்கும் நோக்கில் ஒரு பணிக்குழுவை உருவாக்கும் அரசாங்கத்தின் முடிவை  பெர்சாத்து துணைத் தலைவர் ரொனால்ட் கியாண்டி கேலி செய்து பேசியுள்ளார்.

இந்தப் பணிக்குழு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்ட அவர்,  புத்ராஜெயா உண்மையான அல்லது போலியான செய்திகளை எவ்வாறு தீர்மானிக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்தார்கள், அது பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகக் கூறினர். இப்போது, ​​அரசாங்கமாக இருக்கும்போது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *