பெண்களுக்கான சிறப்பு பரிசோதனை! - துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கிவைத்தார்!

top-news
FREE WEBSITE AD

தாப்பா, ஆகஸ்ட் 9: பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்களுக்கான சுகாதார பரிசோதனை நிகழ்ச்சியை தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார்.

பாத்தாங் பாடாங் மாவட்ட அளவிலான இந்த நிகழ்ச்சி டேவான் மெர்டேக்கா தாப்பாவில் நடைபெற்றது. 

இதனிடையே பெண்கள் மார்பக, கர்ப்பப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பரவுவது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என தமதுரையில் சரஸ்வதி கூறினார். 

பெண்கள் அவ்வப்போது சுகாதார பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். 

புற்றுநோய் பரவுவதை முன்கூட்டியே கண்டறிந்துகொள்ள இந்த பரிசோதனை மிகவும் அவசியம் என்றார் அவர்.  இதன் வழி பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என அவர் தெரிவித்தார். 

அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பெண்கள் இலவச பரிசோதனையை மேற்கொள்ளலாம் என அவர் ஆலோசனை கூறினார். 

இந்த மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சியை பாத்தாங் பாடாங் மாவட்ட சுகாதார அலுவலகம், தேசிய புற்றுநோய் மன்றம், தேசிய புற்றுநோய் சங்கம், தாப்பா மாவட்ட மன்றம், ஓராங் அஸ்லி மேம்பாட்டு இலாக்கா ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தது. 

இந்த நிகழ்ச்சியில் பாத்தாங் பாடாங் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் வி.சி அனுராதா, தாப்பா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கிரிதரி நாத், பாத்தாங் பாடாங் மாவட்ட ஒருமைப்பாட்டு அதிகாரி நூர்சிலாவாத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்!


 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *