இஸ்ரேல் மீண்டும் அட்டுழியம்! அன்வார் கண்டனம்
- Shan Siva
- 08 Oct, 2025
கோலாலம்பூர், அக் 8: ஒன்பது மலேசியர்களுடன் காசாவிற்குச் சென்ற ஃபிரீடம்
புளோட்டிலா கூட்டணியின் மனிதாபிமானப் பணி இன்று காலை 10.50 மணிக்கு இஸ்ரேலியப்
படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சர்வதேச
கடல் பகுதியில் சட்டவிரோதமாக அக்குழு இடைமறிக்கப்பட்டதாகக் கூறிய அன்வார், இது சர்வதேச சட்டங்களை மீறும் ஒரு ஆத்திரமூட்டும் செயல்
என்று தெரிவித்தார்.
காசா
மக்களுக்கு உதவி கொண்டு வந்த மனிதாபிமானப் பணியை தடுத்து வைப்பது அடிப்படை மனித
உரிமைகளை மீறும் ஒரு மனிதாபிமானமற்ற செயல். அனைத்து மலேசிய ஆர்வலர்கள் மற்றும்
தன்னார்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும், மேலும் அவர்கள் (இஸ்ரேலால்) தடுத்து வைக்கப்பட்டுள்ள காலம் முழுவதும்
காயமடையாமல் இருக்க வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
சம்பந்தப்பட்ட
மலேசியர்களின் உயிரைப் பாதுகாக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்
என்றும்,
அவர்களின் விடுதலையை எளிதாக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச
அமைப்புகளுடன் தொடர்பில் இருப்போம் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
புளோட்டிலாவில்
25 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 150 பங்கேற்பாளர்கள் உள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



