GISB உறுப்பினர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பல மனைவிகளை வைத்துள்ளனர்! அடுத்தடுத்து அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 23: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் நிறுவனத்தின் சில உறுப்பினர்கள் பல மனைவியரை வைத்துள்ளதாகவும், அதன்மூலம்  34 குழந்தைகள் வரை உள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசேன் வெளியிட்டுள்ளார். ஆனால், அவர்களின் குழந்தைகளின் பெயர்கள்கூட அவர்களுக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

GISB நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சமூக நல இல்லங்களில் இருந்து அதிகாரிகள் மீட்டுச் சென்ற குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கதியை அறிந்திருக்கிறார்களா? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்கள் GISB நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்று ரஸாருதீன் கூறினார்.

சுமார் 10,000 GISB உறுப்பினர்கள் பல மனைவிகளைக் கொண்டிருப்பதாக ரஸாருதீன் கூறினார். இதன் விளைவாக பெரிய குடும்பங்கள் உருவாகின்றன என்று அவர் விளக்கினார்.

உதாரணமாக, சில உறுப்பினர்களுக்கு நான்கு மனைவிகள் மற்றும் 34 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரை மட்டுமே கவனித்துக்கொள்கிறார்கள், மீதமுள்ள 32 பேரின் பெயர்கள் கூட தெரியாது என்று அவர் அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *