நடிகர் விஜய் நடிகர் சரத்குமார் வீட்டிற்கு சென்ற காரணம் இதுதானா!

top-news
FREE WEBSITE AD

 சினிமாவின் இளைய தளபதியாக மக்கள் மனதில்  இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராக வலம் வருகிறார், ஆனால் திடீரென நடிப்பை நிறுத்தப்போவதாக கூறி ரசிகர்களுக்கு கடும் அதிச்சியை கொடுத்தார்.

69வது படம்  நான் நடிக்கும் கடைசிப்படம் என கூறி இனி முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.அவர் நடிக்க மாட்டார் என்பது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் தளபதி மக்களுக்காக அரசியல் வர இருப்பது சந்தோஷம் என்கின்றனர். தற்போது விஜய்யின் கோட் படத்தின் வேலைகள் படு விறுவிறுப்பாக  நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் ராதிகா மற்றும் சரத்குமார் வீட்டிற்கு சென்ற சம்பவம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அதாவது விஜய் சில வருடங்களுக்கு முன்பு திடீரென ராதிகா வீட்டிற்கு சென்றுள்ளார், அங்கு அவரது மகன் ராகுல் இருந்துள்ளார்.விஜய்யை பார்த்ததும் அவர் தனது அப்பா சரத்குமாருக்கு போன் செய்ய, நான் வெளியே இருக்கேன்  என்று கூறியிருக்கிறார்.அதற்கு விஜய், உங்களை பார்க்க வரலில்லை, ராகுலுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு செல்லலாம் என வந்ததாக கூறியிருக்கிறார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *