கோலாலம்பூர் பாதுகாப்பற்ற நகரமா? அமைச்சர் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: அண்மையில் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வில் மூழ்கி மாயமான, இந்திய மாது விவகாரத்தை அடுத்து, கோலாலம்பூர் நில அமைப்பு குறித்து கேள்விகள் எழுந்த நிலையில்,  கோலாலம்பூரின் பாதுகாப்பு குறித்து புவியியல் துறை அறிக்கைகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் நகரின் பாதுகாப்பு குறித்து பல தரப்பினரிடம் இருந்து விசாரணைகளைப் பெற்றிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா, தெரிவித்தார்.

மேலும், கோலாலம்பூர் பொதுவாக பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷயத்தை புவியியல் துறை உட்பட நிபுணர்களுடன் விவாதித்திருப்பதாக  அவர் கூறினார்.

மேப்பிங் மற்றும் முழு நகரத்தையும் உள்ளடக்கிய மண்ணின் கட்டமைப்பை ஆய்வு செய்வது புதிய செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *