பிரதமர் அன்வாரின் உருவப் பொம்மையை எரித்த பல்கலைக்கழக மாணவர்கள்!

top-news

ஜூன் 22,

சபா கனிமவள ஊழலில் சம்மந்தப்பட்ட அரசியல் தலைவர்களைப் பிரதமர் அன்வார் பாதுகாப்பதாகவும் அரசியல்வாதிகளின் ஊழலை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மறைப்பதாகவும் சபா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பிரதமர் அன்வாரின் உருவப் பொம்மையும் அன்வாரின் புகைப்படங்களுடனானப் பதாகைகளும் எரியூட்டப்பட்டது. பொதுவெளியில் நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக அன்வாரின் புகைப்படங்கள் எரிக்கப்பட்டதைப் போராட்டம் நடத்திய சபா பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.


சபாவின் கனிமவளங்களைப் பாதுகாக்காமல் லஞ்சம் பெற்று குத்தகைக்கு விடும் அரசியல்வாதிகளை எதிர்த்து மட்டும் எங்கள் போராட்டம் நின்றுவிடாது. சபாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் எங்களைப் போன்ற மாணவர்களின் நிலை குறித்தும் அரசாங்கம் கண்டுக் கொள்ளவில்லை. பல முறை போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்திய நாங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியும் இதுவரையும் அரசாங்கம் எந்தவொரு தீர்வும் வழங்கவில்லை. அண்மையில் அன்வார் ஊழலுக்கு எதிராகப் போராடுங்கள் என மேடையில் முழங்கினார். அவர் தான் ஊழலுக்கு எதிராகப் போட்டம் நடத்த சொன்னார். நாங்கள் அவரையும் எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம். எங்களுக்கு அரசியல் கட்சிகளில் பிரிவினைகள் இல்லை. எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் ஊழல் நடந்துக்கொண்டே இருக்கிறது. இளைஞர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். போராட்டத்தின் ஒரு பகுதியாக அன்வாரின் உருவப் பதாகைகள் எரிக்கப்பட்டது. அந்த எரிப்புச் சம்பவம் சுமூகமாகக் கையாளப்பட்டதாகவும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அப்பகுதியை நாங்களே சுத்தம் செய்துவிட்டோம். ஆனால் இந்த நாட்டை யார் சுத்தம் செய்வது? எனும் கேள்வியை சபா பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.


Mahasiswa universiti di Sabah membakar patung dan gambar Perdana Menteri Anwar Ibrahim sebagai protes terhadap dakwaan perlindungan politik terhadap rasuah berkaitan industri mineral. Mereka mendakwa kerajaan gagal menangani isu pelajar dan ketirisan sumber negeri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *