திருவிழா சாப்பாடு - திசையெங்கும் சிவப்பு அலை! - பரபரப்பில் சுங்கை பக்காப்!

top-news
FREE WEBSITE AD


( தி.ஆர்.மேத்தியூஸ்)

சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வெற்றிபெற்று, தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கு விடிவு காலம் பிறக்குமென மலேசிய  அரிமா சங்கத்தின் தோற்றுநர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. அந்த வகையில் இந்த சுங்கை பக்காப்
தமிழ்ப்பள்ளியை கட்டி முடிக்க வேண்டிய கடமை தொகுதி மக்கள் பிரதிநிதி கைகளில் இருப்பதால், வரும் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரை வெற்றிப் பெற செய்ய வேண்டியது அவசியமென என அவர் கூறினார்.
மேலும் மக்களின் பல சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் ஜுஹாரி அரிஃபின்னுக்கு
வற்றாத ஆதரவு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இன்று அரிமா ஏற்பாட்டில் சிம்பாங் அம்பாட் ,தாமான் புத்ரி குனோங்கில் நடைபெற்ற மடானி ஒன்றுகூடல் நிகழ்வில்  ஓம்ஸ் பா.தியாகராஜன் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள்,  ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டதோடு, வேட்பாளர் ஜுஹாரி அரிஃபினுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.

காலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அங்கமாக வாக்காளர் பதிவு சரிபார்த்தல், திருவிழா சாப்பாடு, சி றுவர்களுக்கான போட்டி
விளையாட்டுகள், சட்டமன்ற வேட்பாளர் அறிமுகம், கலைஞர்களின் பாடல்கள் போன்ற அங்கங்களும் இடம்பெற்றன.

நிபோங் தெபால் சட்டமன்ற சேவை மையம் மற்றும் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் ஒருங்கிணைப்பில்
நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *