நிதி வேண்டும்! மறுத்தால் பாதை யாத்திரை செல்வேன்! - SYED SADDIQ

top-news
FREE WEBSITE AD

MUAR நாடாளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் நிதி ஓராண்டு ஆகியும் இன்னும் கொடுக்காமல் மடானி அரசு இழுப்பறி செய்வதால் தாம் மூவாரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பாதையாத்திரை செய்யவிருப்பதாக MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman தெரிவித்துள்ளார். மூவாரிலிருந்து நாடாளுமன்றத்திற்கு சுமார் 200 கிலோ மீட்டர் பாதை யாத்திரை மேற்கொள்வதால் தன்னுடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மடானி அரசாங்கத்திடம் 3 முறை மூவார் நாடாளுமன்றத்திற்கான நிதி கோரிக்கையை முன்வைத்தும், எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல் எனது சொந்த பணத்தில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்வதால் தாம் இம்முடிவை எடுத்துள்ளதாக MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman தெரிவித்தார்,

தமது பாதை யாத்திரைக்காக LANGKAH MUAR என தலைப்பையும் வெளியிட்டுள்ளார். தன்னுடன் பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தால் LANGKAH MUAR திட்டம் வெறியடையும் என MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman தெரிவித்தார்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *