கோ சே பே-நூர் இஸ்ஸுதின் குமமோட்டோ மாஸ்டர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினர்

top-news

செய்தி – வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 14-

மலேசியாவின் ஆண்கள் இரட்டையர் கோ சே பே, நூர் இஸ்ஸுதின் ரும்சானி, அடுத்த மாதம் சீனாவின் ஹாங்ஸோவில் நடைபெறவுள்ள பி.டபுள்யூ.எப்  உலக சுற்றுப்பயண இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளனர். ஜப்பானில் நடைபெறும் குமமோட்டோ மாஸ்டர்ஸ் போட்டியில் இன்று அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர்.

உலக தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ள இந்த ஜோடி, குமமோட்டோ பிராந்திய ஜிம்னாசியத்தில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் தைவானின் லீ ஜே ஹூய்-யாங் போ ஹ்சுவான் ஜோடியை 21-16, 10-21, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்தது. சே பே-இஸ்ஸுதின் ஆட்டத்தை முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்தி அபாரமாகத் தொடங்கினர். இருப்பினும், இரண்டாவது செட்டில் அவர்களின் வேகம் குறைந்து, எதிரணி மீண்டு வந்து ஆட்டத்தை முடிவு செட்டுக்கு இழுத்தது.

ஆனால், முக்கியமான புள்ளிகளில் அவர்களின் அனுபவமும் அமைதியும் வெற்றிக்கு வழிவகுத்தது. மூன்றாவது செட்டில் தங்கள் ஆட்டத்தை மீட்டெடுத்த சே பே-இஸ்ஸுதின், 46 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றி, அவர்களின் உலக சுற்றுப்பயண இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *