சியோனிச பிரச்சாரத்தைத் தடுக்க எம்சிஎம்சி உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 30-

இஸ்ரேலிய ஆதரவு சியோனிச பிரச்சாரத்தைத் தடுக்க எம்சிஎம்சி உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது என தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். சியோனிச பிரச்சாரம் நாட்டின் சைபர்வெளியில் ஊடுருவாமல் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.இதற்காக மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரசு இயக்கக்கூடிய தவறான அல்லது தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தைத் தடுக்க, சமூக ஊடக தளங்களின் வழிமுறைகளை எம்சிஎம்சி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.இந்த விஷயத்தில் மலேசியா சமரசம் செய்து கொள்ளாது என்ற உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க, சமூக ஊடக நிறுவனங்களுடன் அரசாங்கம் ஓர் அமர்வையும் நடத்தியதாக அவர் கூறினார்.

இந்த தளங்களுடனான தொடர்ச்சியான முன்னெச்சரிக்கையான ஈடுபாட்டின் முடிவுகள்.மலேசியாவில் சியோனிச ஆட்சி பிரச்சாரத்தைக் கொண்ட வழிமுறைகள் பரவுவதைத் தொடர்ந்து தடுக்கும்.மேலும் இதற்கான தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *