தோல்விக்கு PKR முழு பொறுப்பேற்கும்! மக்களுக்கு நன்றி! - நூருல் இஸா அன்வார்

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 7: சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிகேஆர் முழுப் பொறுப்பேற்கும் என்று நூருல் இஸா அன்வார் தெரிவித்தார்.

சுங்கை பக்காப் மக்கள் எடுத்த முடிவை கட்சி ஏற்று மதிக்கிறது என்று கட்சியின் துணைத் தலைவருமான அவர் கூறினார்.

இந்தத் தோல்வி முழுப் பொறுப்போடும், தொடர்ந்து பிரதிபலிக்கும் ஒரு சமிக்ஞையாகவும், நாம் வசதியாக இருக்க முடியாது என்பதையும், மக்களை நம்பவைக்கும் வேலையை நிறுத்த முடியாது என்பதையும் நினைவூட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், பினாங்கு மற்றும் மலேசியாவின் சிறந்த எதிர்காலத்தைப் பிரதிபலிக்கவும் மாற்றங்களைச் செய்யவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று  நேற்று இரவு சுங்கை பக்காப்பில் செய்தியாளர்கள் கூட்டத்தில்  இவ்வாறு பேசினார்.

வாக்களிக்க வெளியே வந்த வாக்காளர்களுக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்தவர்களுக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

பிரசாரக் காலம் முழுவதும் அயராது உழைத்த பக்காத்தான் மற்றும் பாரிசான் நேஷனல் இயந்திரக் குழுவிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட அவர்,   மக்களுக்கான எங்கள்  கடமைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *