அமெரிக்காவில் 13 நாட்கள் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பும் மு க ஸ்டாலின்!

top-news
FREE WEBSITE AD

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் 27 ம் தேதி சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுதவிர பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அமெரிக்க பயணத்தில் மொத்தமாக தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையி தான் முதல்வர் ஸ்டாலினின் 17 நாள் அமெரிக்கா சுற்றுப்பயணம் என்பது இன்றுடன் முடிவுக்கு வந்தது.இதையடுத்து அவர் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து இன்று துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். சிகோகோ விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் திரண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், '' 'Goodbye, USA!' என பதிவிட்டுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *