மலேசியாவில் தமிழ்மொழியில் இளங்கலை முதுகலை பட்டயக் கல்வி அறிமுகம்

top-news
FREE WEBSITE AD

மலேசியத் தமிழ் வரலாற்றில் புதிய சாதனை படைத்திட மலேசியாவில் செயல்படும் அமைப்புகளில் தமிழ் வளர்ச்சிக் கழகமும் முதன்மையானது.


அவ்வகையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்மொழியில் இயங்கலை, முதுகலைப் பட்டயக் கல்வியைப் பயில விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டுக்குச் செல்லாமல் மலேசியாவியிலேயே தேர்வு எழுதும் வகையில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஒப்பந்தம் பெறும் நிகழ்ச்சி 26/05/2024  ஞாயிறுக்கிழமை அன்று சா ஆலாம் தமிழ் வளர்ச்சிக் கழகம் பணிமனையில் நடைபெற்றது.

மலேசியத் தமிழ் வரலாற்றில் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சி முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன், மதிப்புறு முனைவர் இரா. மல்லிகா தலைமையில் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம் பொறுப்பாளர்கள், மதிப்புமிகு கு.மு. துரை மற்றும் மதிப்புமிகு அருள் முனைவர் முன்னனியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முனைவர் திரு. திருவள்ளுவன், பதிவாளர் முனைவர் சி. தியாகராஜன் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு,  தமிழ்ப்பல்கலைக்கழகத் தமிழ் வளர் மையம் சார்பாகவும் பிரான்ஸ், இலங்கை, இங்கிலாந்து, கனடா, டென்மார்க் போன்ற பல நாடுகளில் தமிழ்க்கல்வி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் தமிழை முதன்மை மொழியாகப் போற்றிப் பாதுகாக்கும் மலேசியாவில் முதுகலைப் பட்டயக்கல்வியைத்  தமிழ்வளர்ச்சிக் கழகம் வாயிலாக நடத்துவதில் பல்கலைக்கழகம் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறது என தெரிவித்தனர்.

இக்கல்விப் பயில விருப்பும் மாணவர்கள் மேல்விபரம் பெற 016-6129554 என்ற எண்ணில் அழைக்கவும்.

செய்தி: சங்கர் வேலு

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *