தமிழ் சீனப் பள்ளிகள் வேண்டுமா? - அன்வார்!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவில் தாய்மொழிப்பள்ளிகள் வேண்டுமா எனும் கேள்வி தேவையற்றது என பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார். தமிழ் சீனப் பள்ளிகள் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதால் தேசியமயமாக்குவதற்குப் பல்வேறு தரப்புகள் முன்மொழிந்து வருவது இன அடிப்படையிலானக் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.

உலகின் எந்தவொரு நாட்டிலும் கல்வியால் மக்களிடையே பிளவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்தால் அதை யாரும் நம்பமாட்டார்கள். மலேசியாவின் வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் முக்கிய தடத்தைப் பதித்துள்ளது, தேசிய பள்ளிகளும் தாய்மொழிப்பள்ளிகளும் பாரம்பரியமாகக் காக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கல்வி கற்பதால் எந்தவொரு சமூகமும் இன ரீதியிலான பிளவுகளை ஏற்காது, இன்று வரையும் அடிப்படை கல்வியைப் பெறாமல் மலேசியாவில் பிள்ளைகள் உள்ளனர். மலேசியர்கள் அனைவரையும் கல்விமான்களாக உருவாக்கிய பின்னர் இது தொடர்பாகக் கல்விமான்களால் கூடிய சபை முடிவெடுக்கட்டும் இன ரீதியிலான அரசியல் தலைவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என பிரதமர் அன்வார் விளக்கமளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *