தேர்தல் வாக்குறுதி இல்லாமலும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் – Muhyiddin

top-news
FREE WEBSITE AD

பத்து பாஹாட், ஜூலை 8-

ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, Perikatan Nasional (PN) தேர்தல் அறிக்கை அல்லது manifesto-வை அறிவிக்காதது குறித்து Tan Sri Muhyiddin Yassin விளக்கம் அளித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தேர்தல் வாக்குறுதிகளின் மீது மட்டும் சார்ந்திருக்காது என BERSATU தலைவர் கூறினார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில், manifesto-வில் COVID-19 குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அப்போதைய அரசு அந்த பெருந்தொற்று நெருக்கடியைச் சமாளிக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

COVID-19 நெருக்கடியை கையாள்வதில் Malaysia மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகளவில் சிறந்த மற்றும் பயனுள்ள முயற்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, manifesto இல்லாவிட்டாலும், அரசு அல்லது அரசியல் கூட்டணி amanah மற்றும் பொறுப்புடன் செயல்பட முடியும் என அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *