தேர்தல் வாக்குறுதி இல்லாமலும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் – Muhyiddin
- Surendran Sumdraraj
- 08 Jul, 2026
பத்து பாஹாட், ஜூலை 8-
ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, Perikatan Nasional (PN) தேர்தல் அறிக்கை அல்லது manifesto-வை அறிவிக்காதது குறித்து Tan Sri Muhyiddin Yassin விளக்கம் அளித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தேர்தல் வாக்குறுதிகளின் மீது மட்டும் சார்ந்திருக்காது என BERSATU தலைவர் கூறினார்.
தாம் பிரதமராக இருந்த காலத்தில், manifesto-வில் COVID-19 குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அப்போதைய அரசு அந்த பெருந்தொற்று நெருக்கடியைச் சமாளிக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
COVID-19 நெருக்கடியை கையாள்வதில் Malaysia மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகளவில் சிறந்த மற்றும் பயனுள்ள முயற்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, manifesto இல்லாவிட்டாலும், அரசு அல்லது அரசியல் கூட்டணி amanah மற்றும் பொறுப்புடன் செயல்பட முடியும் என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



